LOADING

Type to search

இந்திய அரசியல்

திமுக ஆட்சியில் பங்கும் அதிகாரமும் கேட்ட திருமாவளவன் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் திடீர் பல்டியடித்து திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றார்

Share

செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தாவது, “நான் பேசிய வீடியோவை அட்மின் போட்டு உள்ளார். அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை. இந்த பழைய கோரிக்கையை நினைவுபடுத்தி தற்போது பேசியதை ஏன் போட்டனர் என்பதை அட்மின் இடம் கேட்பேன். இரண்டு அட்மின்கள் உள்ளதால் விளக்கம் கேட்க வேண்டும். தேர்தல் அரசியலில் நுழைந்ததில் இருந்தே நான் வைக்கும் கோரிக்கை தான் இது. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், எளிய மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். ஜனநாயகத்தில் அதிகாரப்பரவல் என்பது முக்கியம். அதிமுகவுடன் கூட்டணி என்று நாங்கள் கூறவில்லை. மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்பு படுத்தக் கூடாது என்றும் நான் தெளிவாக சொல்லி விட்டேன்.

மதுபானக் கடைகளுக்கு எதிராக, மதுக் கடைகளை மூட போராட மாட்டீர்களா? என்று மக்கள் என்னிடம் கேட்டதால் நான் இந்த மாநாட்டை நடத்துகிறேன். திமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளோம். திமுகவுடன் கூட்டணி என்றும் தொடரும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.