LOADING

Type to search

இந்திய அரசியல்

ராமரை வழிபடும் கட்சிக்கு ஆணவம் அதிகமாகிவிட்டது என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.

Share

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

‘ராமரை வழிபடும் கட்சிக்கு ஆணவம் அதிகமாகிவிட்டது. அதனால் ராமர் அவர்களை 240 இடங்களை கொடுத்து அவர்களின் ஆணவத்தை நிறுத்தியிருக்கிறார். மேலும், அவர்களின் நம்பிக்கைக்காக அவர்களை பெரிய கட்சியாக உருவாக்கியிருக்கிறார். ராமரை நம்ப மறுத்தவர்களுக்கும் 234 இடங்களை கொடுத்தும் தோற்கடித்திருக்கிறார். ராமருக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஆட்சியை கொடுக்கவில்லை. ‘இவ்வாறு அவர் தெரிவித்தார்.