LOADING

Type to search

உலக அரசியல்

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 14 பேர் பலி

Share

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 பேர் இந்தியர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர். 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியர்களா? என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.