LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் வெற்றி – ஈரான் தலைவர் அறிவிப்பு

Share

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்திய பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இந்த தாக்குதலில், ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதனால், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.

இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி அழித்தது. இந்நிலையில், இஸ்ரேலில் டெல் அவிவ் நகரருகே திடீரென நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய ஈரானியர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களை இஸ்ரேல் வீரர்கள் சுட்டு கொன்றனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் மீது 180-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் வீசப்பட்டன. எனினும், அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் நடுவழியிலேயே தாக்கி அழித்தது. இந்த ஏவுகணைகளை ஈரான் வீசிய நிலையில், கடவுளிடம் இருந்து கிடைத்த வெற்றி மற்றும் வெற்றியை நெருங்கி விட்டோம் என்று ஈரான் தலைவர் அலி காமினி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.