LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்

Share

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே. அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சர் ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை அமைச்சர் டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் நாட்டின் அமைச்சரவையில் புதிய மாற்றம் தேவை என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அண்மையில் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் முக்கிய தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர்.

இந்தநிலையில் நாட்டின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்து வந்த டிமிட்ரோ குலேபா தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். போர் பதற்றத்துக்கு நடுவே உக்ரைன் நாடளுமன்ற சபாநாயகர் ரூஸ்லென் ஸ்டீபன்சுக்கிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நேரில் அளித்துவிட்டு டிமிட்ரோ குலேபா பதவி விலகியுள்ளார்.